என் காதல் ஏக்கம்!
உன் நெஞ்சின் ஓரமாய்
உன்னையன்றி நுழைவேனடி !
சிக்கலே இல்லா வாழ்க்கையில்
உன் பின்னலில் சிக்கி கொள்ள
ஏனோ ஆசை கூடுதடி !
கள்ளம் இல்லா உள்ளத்தில்
உன் கனவை திருடும் கள்வனாய்
ஒரு நிமிடம் போதுமடி !
மடிந்த விதை விதைக்கொடுப்பது போல
முடிந்த இருள் ஒளி கொடுப்பது போல
என் உயிர் எடுத்து
உன் உயிராய் வருவேனடி !
உன் தேகம் சுருங்கினாலும்
என் உலக தேடல் அடங்கினாலும்
அன்பின் நிறமோ ஒன்றுதானடி !
நம் காதல் வயதோ ஒன்றுதானடி !
No comments:
Post a Comment