Monday, July 23, 2018

en kadhal yekkam

                         என் காதல் ஏக்கம்!


காற்றுக்குள் வெட்பமாய் 
வேருக்குள்  ஈரமாய் 
உன் நெஞ்சின் ஓரமாய் 
உன்னையன்றி நுழைவேனடி !
    
சிக்கலே  இல்லா வாழ்க்கையில் 
உன் பின்னலில் சிக்கி கொள்ள 
ஏனோ ஆசை கூடுதடி !

கள்ளம் இல்லா உள்ளத்தில் 
உன் கனவை திருடும் கள்வனாய்  
ஒரு நிமிடம் போதுமடி !

மடிந்த விதை விதைக்கொடுப்பது  போல 
முடிந்த இருள் ஒளி கொடுப்பது போல 
என் உயிர் எடுத்து 
உன்  உயிராய் வருவேனடி !

உன் தேகம் சுருங்கினாலும் 
என் உலக தேடல் அடங்கினாலும் 
அன்பின் நிறமோ ஒன்றுதானடி !
நம் காதல் வயதோ ஒன்றுதானடி !


No comments:

Post a Comment