Saturday, July 21, 2018

THANIMAI

தனிமை    

மனிதா நீ பிறந்தது தனியாகத்தான் .
கடவுள் கருணையால் உனக்கு பொழிந்த 
ஒவ்வொரு உறுப்பும் உன்னிடம் இருப்பது தனியாகத்தான் .
ஒன்று சேர்ந்தால் உலகையே அழிக்கும் 
இரவும் பகலும் வருவது கூட தனியாகத்தான் .
உன் தாகத்தை தணிக்க உதடு பிரிவதும் தனி தனியாகத்தான் .

தாயின் கருவறையில் ஓட்டம் பிடித்து நீ 
ஒளிந்துகொண்டதும் தனியாகத்தான் .
தனிமை !
உன் வாழ்க்கைக்கு ஒரு தடையல்ல -அது 
உன் தைரியத்தை தட்டி எழுப்பும் விடை .

தனிமையில் வாழ்வது நலமென கூறவில்லை நான் 
தனிமையில் வாழ்வதிலும் நலமில்லாமல் இல்லை என்று தான் கூறுகிறேன் .


ஒரு ஓசை எழும்ப வேண்டுமானால் 
இரு கையும் பிரிந்தொன்று சேர வேண்டும் -அது
போலத்தான் வாழ்க்கையும் ,

பிரிவு என்பதொரு வலி அல்ல -அது
 ஓசை பிறப்பதற்கான வழி 

இந்த வழி பிறக்க -உன் 
மன விழி திறக்க வேண்டும் 

உன் மனவிழியை  திறக்க வேண்டுமானால் 
நீ வெளி உலகை மறக்க வேண்டும் .




   

                

No comments:

Post a Comment