தனிமை
மனிதா நீ பிறந்தது தனியாகத்தான் .
கடவுள் கருணையால் உனக்கு பொழிந்த
ஒவ்வொரு உறுப்பும் உன்னிடம் இருப்பது தனியாகத்தான் .
ஒன்று சேர்ந்தால் உலகையே அழிக்கும்
இரவும் பகலும் வருவது கூட தனியாகத்தான் .
உன் தாகத்தை தணிக்க உதடு பிரிவதும் தனி தனியாகத்தான் .
தாயின் கருவறையில் ஓட்டம் பிடித்து நீ
ஒளிந்துகொண்டதும் தனியாகத்தான் .
தனிமை !
உன் வாழ்க்கைக்கு ஒரு தடையல்ல -அது
உன் தைரியத்தை தட்டி எழுப்பும் விடை .
தனிமையில் வாழ்வது நலமென கூறவில்லை நான்
தனிமையில் வாழ்வதிலும் நலமில்லாமல் இல்லை என்று தான் கூறுகிறேன் .
ஒரு ஓசை எழும்ப வேண்டுமானால்
இரு கையும் பிரிந்தொன்று சேர வேண்டும் -அது
போலத்தான் வாழ்க்கையும் ,
பிரிவு என்பதொரு வலி அல்ல -அது
ஓசை பிறப்பதற்கான வழி
இந்த வழி பிறக்க -உன்
மன விழி திறக்க வேண்டும்
உன் மனவிழியை திறக்க வேண்டுமானால்
நீ வெளி உலகை மறக்க வேண்டும் .
No comments:
Post a Comment