பயத்தை தூக்கிலிடு
கடவுள் கொடுக்காத இடம் :
பயம் என்பது ஒருவித கற்பனை களத்தில் உருவாவது .அதற்கென ஒரு தனி இடத்தை கடவுள் அளிக்கவில்லை .ஆனால் அதற்கான அனுமதி சீட்டை நம் மனதிற்குள் கொடுக்கிறோம் .
அனுமதி சீட்டை கொண்டு உள்நுழைந்த இந்த பயங்கள் இன்று அனுமதி இன்றி ஒவ்வொரு மனிதனையும் ஆட்கொள்கிறது .
இந்த உலகத்தில் தான் எத்தனை பயங்கள் :
மருத்துவ ரீதியில் பார்த்தால் இதற்கும் ஒரு சுரப்பியே காரணம் .சரி ,இந்த சுரப்பி எப்பொழுது சுரக்கும் இருளை பார்க்கும்பொழுது ,உயரத்தில் நிற்கும்பொழுது ,நமக்கு தெரிந்தே ஒரு தவறு செய்யும் பொழுது ,செய்த தவறை மறைக்கும் பொழுது என பலவிதமான பய நிலையில் சுரக்கிறது .
நன்மையும் ,தீமையும் சரிசமம் :
இந்த உலகத்தின் எல்லா பிரபஞ்ச படைப்புகளிலும் ஒரு வித நன்மை இருக்கும் அதே சமயம் தீமையும் இருக்கும் .அதே போலத்தான் இந்த பயமும் சில சமயங்களில் கைகொடுப்பதும் உண்டு .சில சமயம் ஒரு மனித வாழ்வை அழிப்பதற்கு ஆதாரமாய் அமைவதும் உண்டு .உதாரணமாக , படிக்க கூடிய மாணவர்களுக்கு தேர்வு பயம் .படித்தால் தான் தேர்வில் வெற்றி பெற முடியும் என பயந்து படிப்பில் ஆர்வம் காட்டினால் அது ஒருவித நன்மை அளிக்கும் .அதே பயம் சற்று அதிகமாக சென்று என்னால் நிச்சயம் வெற்றி பெற முடியாது என தேர்வுக்கு முன்பே கடவுளை துணைக்கழைப்பது நிச்சயம் தோல்வியில் தான் முடியும் .
ஓடாதே ,ஒளியாதே :
எந்த ஒரு செயல் செய்யப்போகிறீர்களோ அந்த செயலுக்கு முன்னால் அதன் முடிவை தீர்மானிக்காதீர்கள் .ஒரு செயலை செய்வதற்கு முன்னால் இதில் தோல்வி அடைந்தால் என்ன நடக்கும் என நடக்காத ஒன்றை நினைக்காதீர்கள் .ஏனெனில் அந்த நினைவுகளே உங்கள் தோல்விக்கு ஒரு காரணமாக அமையும் .
எந்த பயம் உங்களை துரத்துகிறதோ அந்த பயத்தை கண்டு ஓடாதீர்கள் மாறாக அதன் அருகில் சென்று அதை எதிர்கொள்ள முற்படுங்கள் .
எதை கண்டு அஞ்சுகிறீர்களோ அதை மீண்டும் ,மீண்டும் செய்து கொண்டே இருங்கள் .
உதாரணமாக நீங்கள் மேடை பேச்சுக்கு பயந்தவர்களாக இருந்தால் ,எப்பொழுதெல்லாம் மேடை பேச்சுக்கான வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அவ்வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துங்கள் .
எந்த பயம் உங்களை துரத்துகிறதோ அந்த பயத்தை கண்டு ஓடாதீர்கள் மாறாக அதன் அருகில் சென்று அதை எதிர்கொள்ள முற்படுங்கள் .
எதை கண்டு அஞ்சுகிறீர்களோ அதை மீண்டும் ,மீண்டும் செய்து கொண்டே இருங்கள் .
உதாரணமாக நீங்கள் மேடை பேச்சுக்கு பயந்தவர்களாக இருந்தால் ,எப்பொழுதெல்லாம் மேடை பேச்சுக்கான வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அவ்வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துங்கள் .
செய்துப்பாருங்கள் :
ஒரு கண்ணாடிக்கு முன்னே நின்று நீங்கள் மேடைக்கு முன்னால் பேசுவதுபோல ,நமது பேச்சை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கேட்டு கைதட்டுவதுபோல கற்பனை செய்து பேசி பழகுங்கள்.
அப்பொழுது அப்பயம் முழுவதுமாக குறைந்துவிடும் .பயம் எப்பொழுது நமக்குள் நுழைந்தது என சிந்தித்து பாருங்கள் !எப்பொழுது நாம் மற்றவர்களுக்காக வாழ தொடங்குகிறமோ ,
எப்பொழுது நாம் மற்றவர்களை நம்ப தொடங்குகிறமோ
அப்பொழுதே அந்த பயத்தின் ஆட்சி ஆரம்பமாகிவிடுகிறது .
உதாரணமாக ,
குழந்தைகளை பாருங்கள் !
அது எதை பற்றியும் நினைக்காது ,யாரை பற்றியும் தெரியாது அதற்கு பயம் என்பதும் கிடையாது .
எனவே முடிந்தவரை நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை பற்றி சிந்தியுங்கள் .மற்றவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என சிந்திக்காதீர்கள் .
எந்த ஒரு விஷயத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த விஷயமே சிலரை பயத்தில் ஆழ்த்திவிடும் .அப்படிப்பட்டவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் .
அந்த பயத்தின் அதிகபட்ச நிலையை பற்றி சிந்தியுங்கள் .அதிகபட்ச நிலை என்றால் ,
உதாரணமாக மேடை பேச்சில் நமக்கு பேச்சு வரவில்லை என வைத்துக்கொள்வோம் ,என்ன நடந்து விட போகிறது ?உலகம் அழிந்து விடுமா? இல்லை யாராவது நம்மை கொன்று விடுவார்களா ?என அதிகபட்சமாக சிந்திக்கும் பொழுது நம்மில் இருக்கும் அந்த குறைந்த பட்ச ஒன்றுமில்லாத பயம் பறந்தோடிடும் .
தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது பயமாக தெரிவதெல்லாம் அருகில் சென்று பார்க்கும் பொழுது ஒன்றுமில்லாமல் போகிவிடும் .அதனால் அதன் அருகில் செல்ல அச்சம் கொள்ளாதீர்கள் .
முடிந்தவரை உங்களுக்கு ஏற்படும் பயத்தை பற்றி உங்களுக்குள் கேள்வி எழுப்புங்கள் .
அப்பொழுது உங்களது அறிவு செயல்படும் .அறிவு செயல்படும் பொழுது அறியாமை நீங்கும் .
அதே போல் உங்களுக்கான பயத்தை பற்றி ஒரு தாளில் எழுதுங்கள் , நாம் எழுதும்பொழுது நம் அறிவு நமது அறியாமையை அகற்ற முயலும் .அச்சத்திற்குரிய விஷயம் என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை .நமது அறியாமையே அச்சத்தை அழைத்து வருகிறது .
எல்லாம் கிடைக்கும் :
இந்த உலகத்தில் யார் யாருக்கு என்னென்ன வேண்டுமோ அவை அனைத்தும் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது .நரகம் பற்றிய அச்சம் வீண் என குறிப்பிடுகிறார் புத்தர் .நீரில் பிறக்கும் மீனுக்கு செவுள்கள் ,பாலை வன ஒட்டகத்திற்கு ஆறு மாதம் தண்ணிர் குடிக்காமல் வாழும் திறன் என ஒவொன்றிருக்கும் என்னென்ன தேவையோ அவை அனைத்தும் இயற்கையின் நியதி படி கொடுக்கப்படும் பொழுது , நரகத்திற்கு சென்றால் மட்டும் மாறிவிடுமா
என்ன ?
நிச்சயம் அதற்கான வசதிகளுடன் மட்டுமே அனுப்பப்படுவீர்கள் .
உன்னால் சாத்தியம்:
கம்பிளி புச்சியிலிருந்து அழகிய வண்ணத்து பூச்சி வருவது சாத்தியம் என்றால் ,இதுவரை சாத்தியமில்லாத செயல்கள் உன்னால் சாத்தியமாவது சாத்தியமே .
சாத்தியமாவதை முயற்சி செய்யாதே !
சாத்தியமில்லாததை சாத்தியமாக்க முயற்சி செய் !
No comments:
Post a Comment